ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் ட்ரம்ப் : பதிலடி கொடுத்த ஈரான்!
ஹோர்முஸ் ஜலசந்தியை இன்று காலையிலேயே மீண்டும் திறப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
மனதாபிமான நடவடிக்கையாக இதனை மேறகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
“Project Freedom” திட்டத்தின் கீழ் எந்தத் தவறும் செய்யாத மக்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளை விடுவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்களை நடத்த உத்தரவிட “வாய்ப்பு” இருப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே ஈரானின் இராணுவம், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான பாதுகாப்புக் கட்டுப்பாட்டைத் தாங்கள் தக்கவைத்துக் கொள்வதாக அறிவித்து, அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.





