இலங்கை

முன்பள்ளி ஆசிரியையிடம் கப்பம் கோரிய கிராம அதிகரிக்கு விளக்கமறியல்!

முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிராம அதிகாரி எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகத் தலைவர் எனக் கூறி ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் வசிக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டின்பேரில், மிரிஹான விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் சுமார் இரண்டு மாதங்களாக ஆசிரியைக்கு அவ்வப்போது போன் செய்து பணம் கேட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்