இலங்கை

மாத்தறைப் பகுதியில் தாயை கொலை செய்த மகன்!

மாத்தறை பங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று (30.08) கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயதுடைய நபரொருவர் தனது தாயை தெப்பத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சந்தேக நபர் சில காலமாக மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த இவர், இரவில்  தனது சகோதரரின் வீட்டில் குழப்பம் விளைவித்துள்ளார்.

பின்னர், இன்று அதிகாலையில் இருந்து உறவினர்களோ சண்டையிட்டு வந்த அவர், அயலவர் ஒருவரின் கையை உடைத்ததுடன், தனது தாயையும் தெப்பத்தால் தாக்கியுள்ளார்.  இதில் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் உள்ள வெறிச்சோடிய மலசலகூடத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content