இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததன் காரணமாக கட்சி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள இன்று (15) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு மற்றும் செயற்குழு இன்று காலை கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்ற கட்சி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் அரசாங்கத்தில் பதவிகளை வகித்தமையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பதவிகளுக்கு உரிய கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக அமைச்சர் லசந்த அழகியவன்னவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (14) பிற்பகல் நடைபெற்றது.

அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததன் காரணமாக கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைந்துகொண்டது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content