தமிழ்நாடு

வேப்பம்பட்டில் பயங்கரம்… ரயில் மோதி மூவர் உடல் சிதறி பலி!

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, தண்டையார்பேட்டை மார்க்கமாக சூலூர்பேட்டை வரை மின்சார ரயிலும் அதேபோல் பெரம்பூர், வில்லிவாக்கம், வேப்பம்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரை மின்சார ரயிலும், சென்னை கடற்கரை மார்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த புறநகர் ரயில்களில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. இப்படித்தான் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

பல ரயில் நிலையங்களில் மேம்பாலங்களோ, சுரங்கப்பாதையோ கிடையாது. இதனால் தண்டவாளத்தை கடந்துதான் மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி தண்டவாளங்களை கடக்கும்போது பொதுமக்கள் ரயிலில் அடிப்பட்ட உயிரிழக்கின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குன்றத்துரை சேர்ந்த 3 பேர் நிகழ்ச்சி ஒன்றிற்காக இன்று வேப்பம்பட்டு வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து சென்ட்ரல் செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளனர். அப்போது 3 பேரும் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதே நேரத்தில் உடலை எடுக்க 108 ஆம்புலன்ஸ் வந்தது. அந்த உடல்களை எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

ரயில் மோதி 3 பேர் உடல் சிதறி பலி

இதையடுத்து பொதுமக்கள் திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக போராட்டம் கைவிடப்பட்டது.

வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால பணிகள் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அந்தப் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மேம்பால பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி நிறைவடைந்த பிறகும் மேம்பால பணி தொடங்கப்படவில்லை. அதே நேரத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சுரங்கப்பாதை பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்பவர்கள் அந்த சுரங்கப்பாதையில் மூழ்கி உயிரிழக்கும் நிலையில் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக சுரங்கப்பாதை பணியை ரயில்வே நிர்வாகமும், தமிழக அரசும் செய்து முடித்து தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேம்பால பணிகளை முடிக்காமல் அலட்சியமாக இருக்கும் ரயில்வே துறைக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content