தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகை தரும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன குறித்து இந்த ஒத்திகையில் நிகழ்ச்சி வாயிலாக காண்பிக்கப்பட்டது

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்வினை ஆய்வு செய்தார் அதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் சிகிச்சை அளிக்கும்  அறைகளை ஆய்வு மேற்கொண்டார்

மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் முறையாக பராமரிக்கப்படுகிறதா தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு அறிந்தார்

இந்த நிகழ்வில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை

மதுரை அரசு மருத்துமனையில் கொரோனா ஒத்திகை மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கொரோனா பரவலை முன்னிட்டு அதற்கான ஒத்திகை இன்று மருத்துவமனையில்  டீன் ரத்தினவேல் முன்னிலை

You cannot copy content of this page

Skip to content