செய்தி தமிழ்நாடு

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான ‘பேரறிஞர் அண்ணா விருது’ அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவுக்கு ‘திரு.வி.க விருது’, வழக்கறிஞர் அருள்மொழிக்கு ‘பெரியார் விருது’, மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனுக்கு ‘அம்பேத்கர் விருது’ வழங்கப்படவுள்ளது.

கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் முறையே பாரதியார் மற்றும் பாரதிதாசன் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று சென்னையில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி