போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி?
போலந்து மற்றும் உக்ரேனியர்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா முன்னெடுக்கும் நாசவேலைகளை எதிர்கொள்ள தயாராகி வருவதாக போலந்தின் சிறப்பு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் டோமாஸ் சீமோனியாக் (omasz Siemoniak) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போலந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஏற்படக்கூடிய மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்குவதே ரஷ்யாவின் கனவாகவும், ரஷ்ய சேவைகளின் கனவாகவும் இருந்தது, இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பரந்த அளவில், போலந்து மற்றும் பால்டிக் […]



