டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர். இதன்போது , ஈச்சலம்பற்று கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 318 பயனாளர்களுக்கும், குச்சவெளி கால்நடை வைத்திய பிரிவை சேர்ந்த 88 […]













