இந்துக்களின் புனித தினம் அவமதிப்பு – சுவிஸ் பிரஜைக்கு சிறை
இந்தோனேசியாவிற்கு சுற்றுலாச் சென்ற சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு நீதிமன்றம், பாலினீசிய இந்துக்களின் புனிதமான அனுசரிப்பை அவமதித்ததற்காக, இன்று ஓராண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரியவருகிறது. 26 வயதான லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகன் Luzian Andrin Zgraggen, என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கி, அமைதியாக இருந்து தியானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படும் ‘மௌன நாள்’ குறித்து […]




