காணி பிரச்சினை குறித்து ஆஸ்திரேலிய தூதுவர் ஆராய்வு!
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த் , கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய தூதுவர் கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள், அதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு, கடல்சார் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு, சுற்றுலாத் தொழில், மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்களின் அபிவிருத்தி ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள நிலம் […]













