இலங்கை செய்தி

தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படும்: கம்பன் விழாவில் ஜனாதிபதி உறுதி!

  • May 4, 2026
  • 0 Comments

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற “கம்பன் விழா”வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் முக்கிய இலக்கிய மற்றும் கலாச்சார விழாவான கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி பாரம்பரிய இந்து சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு அநுர தலைமையில் அமோக வரவேற்பு!

  • May 4, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாலைதீவு மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இந்த அரச பயணத்தை மேற்கொள்கிறார். மாலைதீவு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்தார் விஜய்!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தஞ்சை உட்பட 4 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல் உதயமாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்பில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்திவருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. 10 வரையான தொகுதிகளில் 2ஆம் இடத்தில் உள்ள தவெக , முதலிடம் வருவதற்கு 1000 வரையிலான வாக்கு வித்தியாசமே […]

உலகம் செய்தி

“Project Freedom” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

  • May 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது கப்பல்களைப் பாதுகாக்க ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் நுழைந்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை பாதை முழுவதும் ஈரானிய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு நுழையும் வெளிநாட்டுப் படைகளைத் தாங்கள் எதிர்க்கப் போவதாகவும் மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார். அமெரிக்கா “Project Freedom” என்ற திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிறுத்தத் தயாராகிவரும் நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை […]

உலகம் செய்தி

‘Project Freedom’; 15,000 படையினரை களமிறக்கும் அமெரிக்கா!

  • May 4, 2026
  • 0 Comments

‘Project Freedom’ என்ற பெயரில் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய நடவடிக்கையை அமெரிக்க இராணுவம் தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 15,000 படைவீரர்கள் மற்றும் 100 போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் , சரக்கு போக்குவரத்தை தடையின்றி பராமரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு அவசியமானது என்று அட்மிரல் பிராட் கூப்பர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அலை! முடிவுக்கு வருகிறது மம்தா ஆட்சி!!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி 181 வெற்றி நடைபோட்டுவருகின்றது. திரிணமூல் காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதியும் நடைபெற்றன. இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பால்டா தொகுதிக்கு வரும் 21ம் திகதி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டம்! சொந்த தொகுதியில் ஸ்டாலின் திண்டாட்டம்!!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் மற்றும் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கோஷம் எழுப்பிவருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தைபெறும் என கட்சி தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றார். தமிழக சட்டப்பேரவைத் […]

உலகம் செய்தி

ஆஸ்ரேலியா, ஜப்பானுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

  • May 4, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் புதிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் எரிசக்தி, உணவு பாதுகாப்பு மற்றும் முக்கியமான தாதுக்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் Takaichi Sanae  இன்று பிரதமர்  Anthony Albanese  ஐ சந்தித்து பேச்சு நடத்தினார். இதனையடுத்தே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், […]

உலகம் செய்தி

பாகிஸ்தானின் அமைதி முயற்சி தொடரும்!

  • May 4, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் பாகிஸ்தானின் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மோதல்களைத் தீர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான சமாதான முயற்சிகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தது. பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தனது தூதரகப் பணிகளை முன்னெடுக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 2ஆம் சுற்று அமைதி பேச்சை […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.: நாம் தமிழர் கட்சிக்கும் பின்னடைவு!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. ஆளுங்கட்சியான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் அமைச்சர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக […]

error: Content is protected !!