தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படும்: கம்பன் விழாவில் ஜனாதிபதி உறுதி!
அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற “கம்பன் விழா”வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் முக்கிய இலக்கிய மற்றும் கலாச்சார விழாவான கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி பாரம்பரிய இந்து சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி […]













