ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை குறிவைத்த ரஷ்யா!
ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை, ரஷ்யா வேண்டுமென்றே இரண்டு முறை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) ஆகியோரின் கண்டனத்தையும் தூண்டியுள்ளது.
இந்த வாரம், ரஷ்யா உக்ரைன் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் ஏராளமான ஏவுகணைகளையும் ஏவியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் 20 நேரடி ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 63 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதல்களால் ஒடெசா மற்றும் கார்கிவ் நகரங்களில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளும் குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




