அமெரிக்க படைகள் தயார் நிலையில்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகள் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் CENTCOM அறிவித்துள்ளது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.





