அரசியல் இந்தியா செய்தி

தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று கிடைக்கும் விடை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இந்திய நேரப்படி இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முற்பகல் 11 மணி […]

இலங்கை செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

  • May 3, 2026
  • 0 Comments

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, […]

இலங்கை செய்தி

திறைசேரி நிதி மோசடி: FBI உதவியை நாடியது இலங்கை?

  • May 3, 2026
  • 0 Comments

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை புலனாய்வாளர்கள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் FBI உதவியை நாடியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் ஊடுருவல் தாக்குதல்களைக் கண்டறிந்து தணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தையும் இலங்கை விசாரணைப் பிரிவு தொடர்பு கொண்டுள்ளது. மோசடி மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தன, திறைசேரியிலிருந்து மோசடியாகத் திசை திருப்பப்பட்ட நிதி எங்கே உள்ளது, இந்த மோசடிக்குப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஓட்டோ டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  லீற்றரொன்றின் புதிய விலை 392 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சூப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றரொன்றின் புதிய விலையாக 458 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 265 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக […]

இலங்கை செய்தி

திறைசேரி செயலாளர் ராஜினாமா? அரசு கூறுவது என்ன?

  • May 2, 2026
  • 0 Comments

திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம், இணைய உடுருவிகளால் திருடப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. குறிப்பாக திறைசேரி செயலாளரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையிலேயே தேசிய மக்களின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் […]

உலகம் செய்தி

தென்கொரியா, ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் மந்திராலோசனை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்த போர் ஆக்கிரமிப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதேவேளை, நிரந்தர போர் நிறுத்தத்துக்கான ராஜதந்திர நகர்வுகளுக்கு தென்கொரியா ஆதரவளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்த சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த ஐந்து சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் மேற்படி தடைகளை முடக்குவதற்கான தடை உத்தரவு ஒன்றையும் சீனா பிறப்பித்துள்ளது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் இந்த அத்துமீறிய தலையீட்டைத் தடுப்பதே சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது. பெய்ஜிங்கின் இந்த உத்தரவு எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் […]

உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: காசாவில் ஊழித்தாண்டவம்!

  • May 2, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2025 ஒக்டோபரில் போர்நிறுத்த ஏற்படுத்தப்பட்டது. எனினும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரையில் 72, 600 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இந்த வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் செய்தி

ஈரானில் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது. 64 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், இந்தத் தடையால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தை தட்டிக்கேளுங்கள்: அமெரிக்க மக்களிடம் ஈரான் கோரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள போரை அந்நாட்டு மக்கள் தட்டிக்கேட்க வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலானது எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாகும் என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baqaei சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தியே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக […]

error: Content is protected !!