தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி

3 பிரதான நோக்கங்களுக்காகவே தமிழ பேசும் கட்சிகள் ஒன்றிணைவு

  • July 14, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி அல்லவெனவும், ஒரு பொது மேடை எனவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா […]

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

பிரான்ஸை எதிர்கொள்ள அஞ்சுகிறதா ஸ்பெயின் அணி?

  • July 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பெல்ஜியம் அணிக்கு எதிரான கால் இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஸ்பெயினைக் கண்டு பிரான்ஸ் தான் அச்சப்பட வேண்டும் வேண்டும் என்று பார்சிலோனா கிளப்பின் இளம் வீரரான யமால் கூறியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பொறுப்பற்று செயல்படும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்: ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு

  • July 14, 2026
  • 0 Comments

Apple,Meta,Google உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறார்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆன்லைன் பாலியல் மிரட்டல்களைத் (online sexual extortion) தடுப்பதில் பெரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான eSafety செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளது. பாலியல் மிரட்டல் விடுபவர்கள் பயன்படுத்தும் பொதுவான மிரட்டல் உத்திகளையும் உரையாடல் வடிவங்களையும் (coercive scripts) கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்தும், ஆன்லைன் தளங்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று eSafety தனது அறிக்கையில் சாடியுள்ளது. “கிரிமினல்கள் தங்களது சேவைகளை […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: மேலும் இரு அதிகாரிகள் மரணம்

  • July 14, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததை அடுத்தே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிரிகரித்துள்ளது. 25 மற்றும் 39 வயதுடைய அந்த அதிகாரிகள், நேற்று இரவும், இன்று அதிகாலையும் காயங்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 5 […]

காணாமல்போனோர் தொடர்பாகப் பதிவாகியுள்ள 11,000 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஈராண்டுக்குள் நிறைவு

  • July 14, 2026
  • 0 Comments

காணாமல்போனோர் தொடர்பாகப் பதிவாகியுள்ள 11,000 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “தேசிய நல்லிணக்கம் என்பது மிக முக்கியமானது. அதனை ஏற்படுத்துவதற்காக அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி […]

ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை பிரிட்டன் அறிவித்தது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் தடை சட்டவிரோதம்; ரஷ்யா பதிலடி

  • July 14, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை பிரிட்டன் அறிவித்தது. “ரஷ்ய உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்புடைய பிராக்சி நெட்வொர்க்குகளில் (proxy networks) ஈடுபட்டுள்ள சைபர் குற்றவாளிகள் உட்பட, அழிவுகரமான சைபர் மற்றும் கலப்பின செயல்பாடுகளுக்குப் (hybrid operations) பின்னால் இருக்கும் 24 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை இன்றைய நடவடிக்கை இலக்காகக் கொண்டுள்ளது” என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானியா […]

ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார். செய்தி

ஈரானின் மிகப்பெரிய பாதாள களஞ்சியசாலையை தகர்ப்போம்: ட்ரம்ப் சூளுரை

  • July 14, 2026
  • 0 Comments

ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார். ” பிக்ஆக்ஸ் மவுண்டனைத் நாம் தகர்க்கப் போகிறோம். ஈரானியர்களைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்,” என்று Hugh Hewitt Show அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். ” பிக்ஆக்ஸ் மவுண்டனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்கே எந்தச் செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களது அணுசக்தி விவகாரத்தில் நல்ல […]

பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு

  • July 13, 2026
  • 0 Comments

பாரசீக வளைகுடா மற்றும் அதற்கு அப்பாலுள்ள ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு மிக முக்கிய ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும் என்றும், அதைக் கண்காணிப்பதற்கான கட்டணத்தை ஏனைய நாடுகள் அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) […]

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. செய்தி

ஹேர்முஸ் நீரிணை நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த நீரிணையில் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் “அபாயகரமான நடவடிக்கைகள்”, பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெருமளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை நாங்கள் அனுமதிக்கவில்லை, இனிமேலும் அனுமதிக்க மாட்டோம் […]

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

  • July 13, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2019-ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 301,706 […]