உலகம் செய்தி

இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆபத்தா?

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் உடனான அமெரிக்காவின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (AIPAC) தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையையும் அதன் பாதுகாப்புத் திறனையும் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த இறுதி ஒப்பந்தம் தீர்வுகாண வேண்டும் என்று AIPAC எதிர்பார்க்கின்றது. இந்த பேச்சுவார்த்தை செயல்முறைகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் […]

செய்தி விளையாட்டு

பரபரப்பானது ஆடுகளம்: ஈரான் தேசிய கீதத்துக்கு எதிர்ப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அறிவிப்புகள் வெளியான சூழலிலேயே இப்போட்டியும் நடைபெற்றது. திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து அணியின் கேப்டன் கிறிஸ் வுட் கொடுத்த […]

செய்தி விளையாட்டு

இறுதிகட்டம்வரை பரபரப்பு: சமநிலையில் முடிந்த ஆட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் அப் துலேலா அலம்ரி கோல் அடித்து சவுதி அரேபியாவிற்கு முன்னிலை தேடித்தந்த நிலையில், இறுதி நேரத்தில் மேக்ஸி அராவ்ஜோ உருகுவே அணிக்காக ஒரு கோல் அடித்து தோல்வியைத் தவிர்த்தார். உருகுவே அணியின் பயிற்சியாளர் மார்செலோ பீல்சா இந்த முடிவை ஒரு தவறவிட்ட வாய்ப்பாகக் கருதினாலும், […]

இந்தியா செய்தி

33 ஆவது சர்வதேச விருதை வென்றார் மோடி!

  • June 16, 2026
  • 0 Comments

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ஸ்லோவாக்கியா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், அந்நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 1993-ம் ஆண்டு ஸ்லோவாக்கியா […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் தீவு பாதுகாப்புக்காக புதிய திட்டம் முன்வைப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

சாலமன் தீவுகளின் புதிய பிரதமர் மேத்யூ வேல், பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். இந்த நடவடிக்கை இப்பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பிற்கு (PIF) தலைவராகவும் இருக்கும் மேத்யூ வேல் , ஜூன் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸை சந்தித்தபோது இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார் என தெரியவருகின்றது. பிரதமராகப் பதவியேற்றது முதலே மேத்யூ வேல் , ஆஸ்திரேலியாவை நோக்கி ஒரு கூர்மையான மாற்றத்தை […]

இந்தியா செய்தி

அமைதி முயற்சி: இறுதி முடிவுக்காக இந்தியா காத்திருப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமைதி ஒப்பந்தமானது பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் போக்குவரத்து, வர்த்தகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகின்றது. எஞ்சிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான இறுதி உடன்பாட்டை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார். ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா […]

இலங்கை செய்தி

செம்மணியில் 351 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது. இதன்போது புதிதாக 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 360 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுடையவை உள்ளிட்ட 10 மனித எலும்புக்கூடுகள் நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து […]

ஐரோப்பா செய்தி

நடத்தை மாறினால் மட்டுமே ஈரான் மீதான தடை நீங்கும்: EU அறிவிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரானின் நடவடிக்கைகளில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தடைகளை நீக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் ஒரு உண்மையான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே, அந்தத் தடைகளை நீக்குவது குறித்து நாம் சிந்திக்க […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம்: இஸ்ரேல் நிதி அமைச்சர் போர்க்கொடி!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டிற்கு எதிராக இஸ்ரேலின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மற்றும் யாஷர் (Yashar) கட்சியின் தலைவரான காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) ஆகியோரே இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர். “இது ஒரு தோல்வியடைந்த அரசாங்கத்தின் மோசமான முடிவாகும். பிரதமர் நெதன்யாகு வழங்கி வந்த ‘முழுமையான வெற்றி’ என்ற வெற்று வாக்குறுதிகளுக்கும், தற்போது உருவாகியுள்ள இந்த உடன்பாட்டிற்கும் இடையே ஒரு […]

உலகம் செய்தி

போர் விமானங்கள், கப்பல்களை களமிறக்கும் பிரான்ஸ்!

  • June 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார். பிரான்சில் இன்று நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த இந்த தகவலை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த பிரிட்டனும் பிரான்சும் மிக விரைவாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் […]