உலகம் செய்தி

போர்நிறுத்த மீறல் – காசா தாக்குதல்களுக்கு பலஸ்தீன் கடும் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை பலஸ்தீன அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இத்தாக்குதல்கள் “அழித்தொழிப்பு, படுகொலை மற்றும் நாசவேலைப் போர்” என அவர்கள் விவரித்துள்ளனர். மேலும், இது சர்வதேச சட்டங்களையும், போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளையும் வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த நாடுகள் மற்றும் உத்தரவாத நாடுகள், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, பலஸ்தீன மக்களுக்கு எதிரான […]

உலகம் செய்தி

மீண்டும் போர் தொடுக்க வேண்டாம்- அமெரிக்கா, ஈரானுக்கு ரஷ்யா அழைப்பு

  • May 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ மோதலுக்குள் செல்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா  தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக மாஸ்கோ தனது யோசனைகளை யார்மீதும் திணிக்கவில்லை என்றும் அவர்  கூறினார். மறுபுறம், ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு

  • May 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது. ஏப்ரல் 16 அன்று, இஸ்ரேல் தனது தரைப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பை “இடைநிலை பாதுகாப்பு மண்டலம்” என அறிவித்து, அந்த பகுதிக்குள் உள்ள 57 நகரங்கள் மற்றும் கிராமங்களை மக்கள் காலி செய்யுமாறு எச்சரித்தது. இதற்குப் பிறகு, அந்த ஆக்கிரமிப்பு மண்டலத்திற்கு வெளியேயும் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி […]

உலகம் செய்தி

போர்சேதத்திற்குப் பிறகு தப்ரிஸ் விமான நிலையம் மீண்டும் திறப்பு

  • May 27, 2026
  • 0 Comments

வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்திய போரின்போது தாக்குதலுக்குள்ளான இந்த விமான நிலையம், ஈரானிய நிபுணர்களின் புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மீண்டும் […]

உலகம் செய்தி

லெபனான் தாக்குதல் தொடர்ந்தால் அமீரகம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் – ஆய்வாளர் எச்சரிக்கை

  • May 26, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ஈரான் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “தற்போது இரண்டு முக்கிய பதற்ற நிலைகள் உருவாகியுள்ளன. ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில், மற்றொன்று லெபனானில். ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன், அந்த உடன்பாட்டிலிருந்து லெபனான் விவகாரத்தை தனியே பிரிக்க இஸ்ரேல் பிரதமர் […]

உலகம் செய்தி

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடும் சரிவு

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாகக் குறைந்துள்ளன. திங்கட்கிழமைக்குள் போர் நிறத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.5% வீழ்ச்சியடைந்து பீப்பாயொன்றுக்கு சுமார் $97.90 டொலராக குறைந்துள்ளது. பிற்பகலில் சுமார் $97.70 அளவில் பதிவானது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளில் […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது

  • May 25, 2026
  • 0 Comments

நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லடசத்தை அண்மித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 32 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி […]

இலங்கை செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் – புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

  • May 25, 2026
  • 0 Comments

பாடசாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து சுகாதாரத் துறைகள் வைத்தியசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, நோயை கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ நடைமுறைகள், மாதிரி பரிசோதனைகள் மற்றும் பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது […]

செய்தி தமிழ்நாடு

தமிழக அரசினால் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு – குறு விவசாயிகளுக்கு முழு சலுகை

  • May 25, 2026
  • 0 Comments

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களுக்கு புதிய சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 2025 மே முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இதன்படி, .50,000 ரூபா வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே […]

இலங்கை செய்தி

ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு சிறைக்கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு

  • May 25, 2026
  • 0 Comments

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வருகை தரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது., அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் […]