தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது.
ஏப்ரல் 16 அன்று, இஸ்ரேல் தனது தரைப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பை “இடைநிலை பாதுகாப்பு மண்டலம்” என அறிவித்து, அந்த பகுதிக்குள் உள்ள 57 நகரங்கள் மற்றும் கிராமங்களை மக்கள் காலி செய்யுமாறு எச்சரித்தது.
இதற்குப் பிறகு, அந்த ஆக்கிரமிப்பு மண்டலத்திற்கு வெளியேயும் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும், வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து பார்க்கும்போது, சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு — அதாவது லெபனானின் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதி — பொதுமக்கள் செல்லத் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறியுள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.




