போர்சேதத்திற்குப் பிறகு தப்ரிஸ் விமான நிலையம் மீண்டும் திறப்பு
வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்திய போரின்போது தாக்குதலுக்குள்ளான இந்த விமான நிலையம், ஈரானிய நிபுணர்களின் புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மீண்டும் திறக்கப்பட்ட விமான நிலையங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




