இரும்பு ஆலையில் தீ விபத்து: 9 தொழிலாளர்கள் பலி!
ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 4.15 மணிக்கு, எஸ்எம்எஸ் -2 கிடங்கில் இருந்து எஸ்டிசி – 3 க்கு 1500 டிகிரி வெப்பத்தில் உருக்கிய இரும்பு குழம்பை ராட்சத […]













