இந்தியா உலகம் செய்தி

ட்ரம்ப், மோடி அடுத்த வாரம் பிரான்ஸில் சந்திப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியா பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. G – 7 உச்சி மாநாடு எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பிரான்சின் எவியான் நகரில் நடைபெறவுள்ளது. G – 7 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். குறித்த மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் கலந்துரையாடலின்போதே இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர். 2025 பெப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடந்த சந்தித்ததற்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் […]

இலங்கை செய்தி

புலிகள் அமைப்பை ஊக்குவிக்க இடமளியோம்! NPP அரசு திட்டவட்டம்!

  • June 10, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepala தெரிவித்தார். கிளிநொச்சி இளைஞர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற் பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை நாடாளுமன்றத்திலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம். எனினும், உயிரிழந்த உறவுகளை நினைகூர முடியும். புலிகள் […]

இலங்கை செய்தி

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: கிளிநொச்சியில் சோகம்!

  • June 10, 2026
  • 0 Comments

  கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகம் ஒன்றில் நேற்றுக் (09) காலை ஏற்பட்ட திடீர் மின்சார விபத்தில் சிக்கி இளம் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சோகச் சம்பவத்தில் கிளிநொச்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். உயிரிழந்த இளைஞர் நேற்றுக் காலை வழக்கம் போல் குறித்த தொழிலகத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தனது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். […]

இலங்கை செய்தி

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்ன் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் விசேட தடயவியல் அகழ்வாராய்ச்சி நேற்று நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மிகத் தீவிரமாக இடம்பெற்ற போதே இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நேற்று முன்னெடுக்கப்பட்ட […]

இந்தியா செய்தி

G7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

  • June 9, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றார். இவ்விஜயத்துக்காக எதிர்வரும் 13 முதல் 19 வரையான காலப்பகுதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். ஜுன் 14-ம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை , பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஜுன் 15 ஆம் […]

ஐரோப்பா செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதீர்: ஈரான், இஸ்ரேலிடம் பிரிட்டன் வலியுறுத்து!

  • June 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல், ஈரானுக்கிடையில் அதிகரித்துள்ள ராணுவ மோதல்கள் குறித்து பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் Yvette Cooper கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் தற்காலிக போர்நிறுத்தத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். “மீண்டும் ஒரு மோதல் வெடிப்பது யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல. இதனை நேரடியாகத் தெரிவிப்பதற்காக நான் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசினேன்,” என்று அவர் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தெரிவித்தார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை Yvette Cooper […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல்களில் லெபனானில் 3 மாதங்களுக்குள் 3.666 பேர் பலி!

  • June 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையிலான போரால் லெபனானில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 3,666 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11,321 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, லெபனானில் இருந்து செயல்பட்டுவருகின்றது. இந்நிலையில் அவ்வமைப்பின் ராணுவ இலக்குகளை குறிவைத்து கடந்தகாலங்களில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியது. லெபனான்மீதான இஸ்ரேலின் தாக்குதலால், இஸ்ரேல்மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தி இருந்தது. பின்னர் இஸ்ரேலும் பதிலடி கொடுத்திருந்தது. ட்ரம்பின் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை: அரசு மறுப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

சிஐடி தடுப்பு காவலின்கீழ் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் […]

இலங்கை செய்தி

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

  • June 9, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவற்றுடன், அவருக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சரண குணவர்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நான்கு […]

ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்துமாறு முக்கிய இரு நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம்!

  • June 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இரு நாடுகளும் தங்களது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களின் அடிப்படையில், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் நெருக்கமாகச் செயல்பட இக்கூட்டத்தில் உறுதியேற்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் […]