ட்ரம்ப், மோடி அடுத்த வாரம் பிரான்ஸில் சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியா பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
G – 7 உச்சி மாநாடு எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பிரான்சின் எவியான் நகரில் நடைபெறவுள்ளது.
G – 7 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் கலந்துரையாடலின்போதே இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.
2025 பெப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடந்த சந்தித்ததற்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ள சூழலில், இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய, உலகளாவிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





