அரசியல் செய்தி

முடிவுக்கு வந்தது எதிரணியின் சத்தியாக்கிரகம்!

  • June 10, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்காக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், சுரேஷ் சலேவுக்கு நீதி கோரியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது. முன்னாள் அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, டிரான் அலஸ் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை […]

அரசியல் இலங்கை செய்தி

தகவல்களை மறைக்கும் சுரேஷ் சலே: கோட்டாவுக்கு எதிரான தடையால் குழப்பத்தில்!

  • June 10, 2026
  • 0 Comments

” சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுப்பு காவலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என வெளியாகும் தகவல்களையும் அவர் அடியோடு நிராகரித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியவை வருமாறு , “தடுப்பு காவலில் இருக்கும் சந்தேக நபரொருவருக்கு வழங்கப்படும் அத்தனை உரிமைகளும் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் அட்டூழியம்: 13 பேர் பலி!

  • June 10, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானின் Tyre மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். Tirdaba , Deir Qanoun மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒன்பது வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Tyre நகரத்தில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திர்தாபா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் […]

இலங்கை செய்தி

SriLankan Airlines நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக திமால் அரந்தர Dimal Arandara அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் தற்காலிகத் தலைவராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நிரந்தரப் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தப் புதிய பதவிக்கு முன்னதாக, அவர் திறைசேரியின் பிரதிநிதியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இலங்கை செய்தி

வரலாற்று சாதனை படைத்த மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

  • June 10, 2026
  • 0 Comments

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், இந்த மைல்கல் சாதனை என்பது இந்திய மக்கள் அவரது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் இந்தியா […]

அரசியல் இலங்கை செய்தி

‘இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ – அமெரிக்க தூதுக்குழுவுடன் சஜித் ஆராய்வு!

  • June 10, 2026
  • 0 Comments

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு தரப்பினரிடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. அத்துடன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் வாழும் பெண் சமூக ஆர்வலரை குறிவைத்துள்ள சீன உளவாளிகள்?

  • June 10, 2026
  • 0 Comments

லண்டனில் வசிக்கும் முன்னணி சீன சமூக ஆர்வலர் ஒருவரை, பாலியல் நடத்தை கெட்டவராகவும் போதைக்கு அடிமையானவராகவும் சித்தரிக்கும் போலி பதிவுகள் எக்ஸ் தளத்தில் பரப்பட்டன. எனினும், இந்த அவதூறுகள் எலோன் மஸ்க்கின் ‘X’ தளத்தின் விதிகளை மீறவில்லை என்று கூறி அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட China Dissent Network என்ற அமைப்பின் 27 வயது நிறுவனரான Apple Peiqing Ni என்பவர் , சீன அரசு […]

ஐரோப்பா செய்தி

வன்முறை வேண்டாம்: பிஷப் David McClay அழைப்பு

  • June 10, 2026
  • 0 Comments

  கிழக்கு Belfast நகரில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களை அயர்லாந்து திருச்சபையின் பிஷப் David McClay வன்மையாகக் கண்டித்துள்ளார். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்காது என்றும், இவை மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இளைஞர் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு, அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். வன்முறையற்ற மற்றும் அமைதியான சூழல் மீண்டும் வீதிகளில் திரும்ப வேண்டும் […]

ஐரோப்பா செய்தி

Belfast நகரில் வன்முறை வெடிப்பு: பல வீடுகள் தீக்கிரை: பின்னணி என்ன?

  • June 10, 2026
  • 0 Comments

வட அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வெடித்த தீவிர வன்முறையில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேற வேண்டிய பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் புலம்பெயர்ந்தவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால், தீவிரமான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் உருவெடுத்தன. சமூக ஊடகங்களில் பரவிய குடியேற்றவாசிகளுக்கு எதிரான Anti-immigration போராட்ட அழைப்புகளைத் தொடர்ந்து, […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்பே சுரேஷ் சலே அணி குழப்பம்!

  • June 10, 2026
  • 0 Comments

“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு , “ […]