ஆஸ்திரேலியா செய்தி

பிரிட்டனுடன் இணைந்து ஈரானுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா!

  • May 12, 2026
  • 0 Comments

ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அரசு ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் மக்களின் போராட்டங்களை வன்முறையான முறையில் ஒடுக்கியதற்காகவும், கட்டாய ஆடை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதற்காகவும் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த முடக்கங்களை உள்ளடக்கியதுடன், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிழல் வங்கி முறையையும் கட்டுப்படுத்த […]

உலகம் செய்தி

ஈரான் வலையமைப்பை முடக்க நடவடிக்கை: நபர்கள், நிறுவனங்கள்மீது தடை!

  • May 11, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு எதிராகத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஈரான் தொடர்புடைய 12 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலையான தன்மையைச் சீர்குலைக்க முயன்றதை எதிர்த்து இந்த […]

இலங்கை செய்தி

யாழ். தையிட்டி வீதி விவகாரம்: மே 21 ஆம் திகதி தீர்ப்பு!

  • May 11, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி, தற்போது விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த வீதியை மீட்கும் நோக்குடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற விகாராதிபதிக்கு பிரதேச […]

செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு தமிழரசுக் கட்சி வலியுறுத்து!

  • May 11, 2026
  • 0 Comments

“நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளின் அதிகாரம் அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் மாத்திரமன்றி, […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புத்தகம் வழங்கிய சீமான்!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார். சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் […]

இலங்கை செய்தி

மீண்டும் வந்தாள் ‘யாழ் தேவி’!

  • May 11, 2026
  • 0 Comments

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையிலான ‘யாழ். தேவி’ ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட யாழ். தேவி ரயில், பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தச் சேவை ஆரம்பமானதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. யாழ். […]

செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: ஸ்டாலினை சந்தித்தார் விஜய்!

  • May 11, 2026
  • 0 Comments

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் முதலில் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார். இதனையடுத்து முதல்வர் ஜோசப் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஹண்டா வைரஸ்: ஆஸ்திரேலியர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு!

  • May 11, 2026
  • 0 Comments

MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவியதை அடுத்து, அதில் பயணம் செய்த ஆஸ்திரேலிய பிரஜைகளை தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொற்று பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் பெர்த் நகருக்கு அருகில் உள்ள புல்ஸ்ப்ரூக் (Bullsbrook) தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட உள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது அரிதானது என்றாலும், அதன் தீவிரத்தன்மை காரணமாக அவர்களுக்கு மூன்று வார கால கட்டாய தனிமைப்படுத்தல் […]

இந்தியா செய்தி

அசாம் மாநில முதல்வர் நாளை பதவியேற்பு!

  • May 11, 2026
  • 0 Comments

அசாம் மாநில முதல்வராக 2ஆவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா, நாளை பதவியேற்கவுள்ளார். அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126 இல் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த […]

உலகம் செய்தி

அரசியலில் அக்கினிப் பரீட்சையை எதிர்கொண்டுள்ள பிரதமர்!

  • May 11, 2026
  • 0 Comments

லேபர் கட்சியை 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி வழிநடத்திய Keir Starmer பிரதமர், தற்போது தலைமைத்துவம் தொடர்பில் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளார். மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அரியணையேறிய ஸ்டார்மர், பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையிலேயே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மற்றும் அவருக்கு எதிராகக் கடினமாகியுள்ள பொதுமக்களின் மனநிலை ஆகியவற்றால், அவரது அரசியல் வாழ்வில் இனி வரும் காலப்பகுதி அக்கினிப்பரீட்சையாகவே அமையக்கூடும். கடந்த 30 வருடங்களில் […]