உலகம்

லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு நெதன்யாகு களவிஜயம்

  • June 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று, இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதன்போது துருப்புக்களுடன் பேசிய அவர், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் வரை, நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பின்வாங்காது என்று  கூறியுள்ளார். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய மற்றும் லெபனான் அரசாங்கங்கள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்கு நெதன்யாகு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் இரண்டு […]

உலகம்

லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை நிறுத்த நெதன்யாகு உத்தரவு

  • June 20, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டார். இஸ்ரேலிய ஊடகங்களின்படி, பிரதமர் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரும் அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தனர். இதற்கிடையில், ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. ஹிஸ்புல்லா தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறி வருவதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனானில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு […]

உலகம்

லெபனானில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது

  • June 19, 2026
  • 0 Comments

லெபனானில் செயல்படும் புரட்சிகரக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நிறுத்தம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம்

ஹிஸ்புல்லா – இஸ்ரேலிய தலைவர்களுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை!! மத்தியஸ்தத்திற்கான கதவு திறப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக அமெரிக்காவுடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை ஈரான் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து அதிரித்த பதற்றங்களை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், லெபனானுக்கு இஸ்ரேலிய படைகள் செல்லாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், எந்த இஸ்ரேலியப் படைகளும் பெய்ரூட்டிற்குச் செல்லாது, மேலும் அவர்கள் செல்லும் வழியில் உள்ள படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன” என்று  தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கிடையே […]

உலகம்

போரில் திருப்புமுனை : முக்கிய கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!! ஹிஸ்புல்லாவிற்கு ஏமாற்றம்!

  • June 1, 2026
  • 0 Comments

லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது. தரைவழி தாக்குதல் மூலம் பியூபோர்ட் கோட்டையையும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பியூபோர்ட் கோட்டையின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தங்களது நாட்டு தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். பியூபோர்ட் கோட்டையை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியிருப்பது, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஒரு வியத்தகு திருப்புமுனை என்று பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளார். இப்பகுதியில் இஸ்ரேல் […]

உலகம்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : 3,412 பேர் உயிரிழப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

லெபனான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,412 ஆக உயர்ந்துள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் 10,269 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளில், மார்ச் 2 முதல் மே 31 வரை பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடங்கும்.

உலகம்

இயேசு கிறிஸ்து சிலை சிதைப்பு: விசாரணைகள் ஆரம்பம்

  • April 20, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே,  இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இப் படம்  சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • April 13, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,055 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி அன்று இஸ்ரேலியத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,055 ஆக உயர்ந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் குறைந்தது 6,588 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உலகம்

லெபனான் தாக்குதலில் இலங்கை பெண் காயம்

  • April 9, 2026
  • 0 Comments

லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் 10 நிமிடங்களுக்குள் லெபனான் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

உலகம்

250 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நேற்று (08) லெபனான் மீது நடத்திய மிகக்கடுமையான தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.