போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!
அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்றும், ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது, என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போரை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் எந்த இணக்கப்பாடும் எட்டவில்லை. இதற்கிடையே ஹோர்மூஸ் ஜலசந்தியில் இயல்பு நிலை திரும்பும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு தொடர்ந்து செயல்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





