ஒன்றிணைந்தது அதிமுக! சட்டமன்றத் தலைவரானார் பழனிசாமி!!
அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்ததையடுத்து தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் சங்கமித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக்க நியமிக்குமாறுகோரி, சபாநாயகரிடம் கடிதம் கையளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக […]













