காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்த: விசாரணைப் பொறிக்குள் சாகர

  • August 10, 2026
  • 0 Comments

காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம்: “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37ஆவது காவல்துறை மா அதிபர், நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் […]

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இளைஞர் புரட்சியின்போது பின்வாங்கியது ஏன்? நாமல் விளக்கம்

  • August 9, 2026
  • 0 Comments

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: “அரகலய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அக்காலப்பகுதியில் இளைஞர்கள் மீது கோட்டாபய ராஜபக்ச எவ்வித வன்முறையையும் ஏவவில்லை. இளைஞர்களின் போராட்டங்களை இந்தியா, பங்களாதேஷ் […]

வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

  • August 9, 2026
  • 0 Comments

வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாகப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், புலனாய்வுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் குறுகிய காலப்பகுதிக்குள் நீர்கொழும்பு, மஹர, வெலிக்கடை (மகசின்), குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன ஆகிய ஐந்து சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து குழப்ப நிலைகள் உருவெடுத்தன. இந்த மோதல் சம்பவங்களால் உயிரிழப்புகள் […]

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை செய்தி

5 சிறைச்சாலைகளில் மோதல் – 36 பேர் பலி: பலர் காயம்

  • August 9, 2026
  • 0 Comments

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவற்றில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலையே மிகப்பெரிய கலவரமாகப் பதிவாகியுள்ளது. இங்கு நடைபெற்ற வன்முறையில் 10 சிறைச்சாலை அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான பாதிப்பு விவரங்கள் […]

உலகம் செய்தி

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார்: ஈரான் ஜனாதிபதி உருக்கம்

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் தலைமைத்துவம் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் ஈரான் மக்கள் இறுதிவரை உறுதுணையாக நிற்பார்கள் என்று ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். போரிடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிகளுக்கே உள்ளதாகவும், அவர்களின் ஆற்றலை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காகத் தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று கூறியுள்ள அவர், படுகொலைகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஜனாதிபதிக்கும், உச்ச தலைவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு […]

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். செய்தி விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

  • August 8, 2026
  • 0 Comments

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி FIFA உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதைக் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். மேலும், அவரது […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 101 நாட்கள் […]

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த 'ஸ்கேன்டியம்' (Scandium) என்ற மிக முக்கியமான அபூர்வ கனிமத்தை (Rare Earth) வெட்டி எடுப்பதற்கான உலகின் முதல் முதன்மைச் சுரங்கத்தைக் கட்டுவதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிபந்தனையுடனான கடன் உதவி வழங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சீனாவுக்கு ‘செக்’: கனிமப் போரில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கைகோர்ப்பு

  • August 8, 2026
  • 0 Comments

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ‘ஸ்கேன்டியம்’ (Scandium) என்ற மிக முக்கியமான அபூர்வ கனிமத்தை (Rare Earth) வெட்டி எடுப்பதற்கான உலகின் முதல் முதன்மைச் சுரங்கத்தைக் கட்டுவதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிபந்தனையுடனான கடன் உதவி வழங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்திட்டம் சுரங்கத்திலிருந்து தயாரிப்பு வரை மேலைநாடுகளின் ஒருங்கிணைப்பை […]

உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. செய்தி விளையாட்டு

39 வயதில் சாதனை நாயகன் மெஸ்ஸி: ஓய்வு முடிவு எப்போது?

  • August 8, 2026
  • 0 Comments

உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. மெஸ்ஸி எப்போது தனது கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பதை அவரேதான் தீர்மானிக்க வேண்டும் என்று அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சம்மேளனத் தலைவர் கிளாடியோ “சிகி” தபியா (Claudio “Chiqui” Tapia) தெரிவித்துள்ளார். “ஓய்வுபெறுதல் என்பது முற்றிலுமாக அவரது தனிப்பட்ட முடிவு. அவரை நாம் […]

பிரான்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் ஆறாம் தலைமுறைப் போர் விமான வளர்ச்சித் திட்டமான ' Future Combat Air System' (FCAS) வேலைத்திட்டத்தில் இணைவதற்கான முயற்சிகளை இந்தியப் பாதுகாப்பு இந்திய பாதுகாப்பு அமைச்சு இறங்கியுள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸின் 6-ஆம் தலைமுறைப் போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா முயற்சி

  • August 8, 2026
  • 0 Comments

பிரான்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் ஆறாம் தலைமுறைப் போர் விமான வளர்ச்சித் திட்டமான ‘ Future Combat Air System’ (FCAS) வேலைத்திட்டத்தில் இணைவதற்கான முயற்சிகளை இந்தியப் பாதுகாப்பு இந்திய பாதுகாப்பு அமைச்சு இறங்கியுள்ளது. அத்துடன், மேற்படி விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டலையும் பிரான்சிடம் இந்தியா கோரியுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில், இன்றைய வான்வழிப் போர் முறையில் இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஆறாம் தலைமுறை […]