சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: நீதி அமைச்சர் திட்டவட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (20) சாணக்கியன் இராசமாணிக்கம் Chanakyan Rajamanickam எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். “ 2009-ஆம் ஆண்டுபோரின் இறுதிக் கட்டங்களில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது. காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான தரவுகள் எதுவும் இல்லை. போரின் போது இரு […]













