புடினின் அடுத்த கட்டப் போர் வியூகம்!
உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளை ஈடுகட்ட, ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
போர்க்களத்தில் குறைந்து வரும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதியதாக இராணுவத்தில் சேருபவர்களுக்குப் பெரும் தொகையிலான கடன் தள்ளுபடி மற்றும் நிதிச் சலுகைகளை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
இதனுடன், மோல்டோவாவிலிருந்து பிரிந்த டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் வசிப்பவர்கள் எளிதாக ரஷ்யக் குடியுரிமை பெறுவதற்கான புதிய சட்டதிட்டங்களையும் Vladimir Putin நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இந்த வியூகங்கள் அனைத்தும் ரஷ்யாவின் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும், மீண்டும் ஒரு கட்டாய இராணுவத் திரட்டலைத் தவிர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், குடியுரிமை வழங்குவதன் மூலம் மற்ற நாட்டு மக்களையும் போருக்குப் பயன்படுத்தும் ரஷ்யாவின் இந்த முயற்சி, அண்டை நாடுகளிடையே பெரிய அச்சத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




