ஈரான் கப்பலுக்கு இராஜதந்திர அழைப்பை விடுத்ததா இலங்கை?
ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த கனிவான மற்றும் வாய்மொழி அழைப்பைத் தவிர, […]













