ட்ரம்பின் உத்தரவையடுத்து தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்!
லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தவிருந்த தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது, டிரம்ப் தனது அதிருப்தியை வெளியிட்டு, தாக்குதலை நிறுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இஸ்ரேலின் செயல்பாடுகளால் உலகளவில் எதிர்ப்பு கிளம்புவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப் மிகவும் கோபமாகப் பேசியதால், திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் தொடர்ந்தால் பெய்ரூட் மீதான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று நெதன்யாகுவின் அலுவலகம் எச்சரித்துள்ளது.




