இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: மயான எரிதகன மேடையின் அத்திவாரம் இடிந்து வீழ்ந்தது!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது எரிதகன மேடைக்கு அருகில் பல மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் புதைகுழியானது எரிதகன மேடையின் அத்திவாரம் வரை நீண்டு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் […]

உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தத்தைக் கோருகிறது ஈரான்!

  • June 1, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது லெபனான் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கமைய குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்தப் போர்நிறுத்தத்தை மீறுவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான், பெய்ரூட் மீது தரைவழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பானது, ஈரான் […]

அரசியல் செய்தி

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்துக்கும் ஆளுநருக்கும் தொடர்பா?

  • June 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டி […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் அவசர பேச்சு!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையைக் காட்டுமாறு ஈரானிடம், ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஜனாதிபதிக்கும் Masoud Pezeshkian , ஜப்பான் பிரதமருக்கும்  Sanae Takaichi  இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு இதன்போது ஜப்பான் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிய நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கடல்சார் வணிகப் பாதுகாப்பு குறித்து இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. […]

இலங்கை செய்தி

சங்க நீதிமன்றம் வேண்டும்: ஞானசார தேரர் வலியுறுத்து!

  • June 1, 2026
  • 0 Comments

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சங்க நீதிமன்றம் போன்ற பொறிமுறை இன்றியமையாததாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “பௌத்தம் என்பது மிகவும் சுதந்திரமான, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு தத்துவமாகும். தனது குருவைக்கூட விமர்சிப்பதற்கு சுதந்திரம் வழங்கிய மதமாகும். இத்தகைய தாராளத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு சிலர் பௌத்தத்தையும் பிக்குகளையும் அவமதிக்கும் செயல்களில் […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக் கூடுகள் உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

  • June 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் […]

ஐரோப்பா செய்தி

‘அணுசக்தி ஒப்பந்த பேச்சு’ – தொழில்நுட்ப ஆலோசனை வழங்க பிரான்ஸ் தயார்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பணியில் பிரான்ஸ் தீவிரமாகப் பங்கேற்கும் என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாக, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் பிரான்ஸ் தயாராக உள்ளது அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் […]

இலங்கை செய்தி

வழக்கு பதிவு ஏட்டை திருடியவருக்கு மறியல்: உடந்தையாக இருந்த பெண்ணுக்கு பயணத் தடை!

  • June 1, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு , திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று […]

ஆஸ்திரேலியா செய்தி

உலகை மிரட்டும் Ebola வைரஸ்: ஆஸ்திரேலியாவில் பயணக் கட்டுப்பாடு?  

  • June 1, 2026
  • 0 Comments

இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளையோ அல்லது தனிமைப்படுத்தல் (Quarantine) விதிகளையோ விதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ” சர்வதேச அளவில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வந்தாலும், இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிடவில்லை.” – என்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார். […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை நாடும் ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • June 1, 2026
  • 0 Comments

அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், இன்னும் மெதுவாகச் செயல்பட வேண்டும், […]