திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

  • July 17, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை 16ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவர் வீடு திரும்பாத நிலையில் இன்று (17) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியில் வசித்து வரும் முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63வயது) எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி […]

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

பிரதி அமைச்சர் உட்பட அறுவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • July 17, 2026
  • 0 Comments

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த ஆறு சந்தேகநபர்களும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களில் பங்கேற்றமை மற்றும் சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாரச்சி, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் […]

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியா செய்தி

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • July 17, 2026
  • 0 Comments

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் […]

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கை செய்தி

வடக்கில் ஆடிப்பிறப்புப் பெருவிழா

  • July 17, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து […]

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

கிளிநொச்சி சம்பவம்: ஜனாதிபதியிடமிருந்து அமைச்சருக்கு பறந்த அழைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித்திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு இன்று (17.07.2026) […]

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு இடம்பெற்றுவருகின்றன. உலகம் செய்தி

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மாலுமிகளை மீட்கும் முயற்சி வெற்றி

  • July 17, 2026
  • 0 Comments

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு இடம்பெற்றுவருகின்றன. சோமாலிய கடல் பகுதி மற்றும் ஏடன் வளைகுடா வழியாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்ணெய்க் கப்பல்களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்பலும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டன. கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காக சரக்கு கப்பலில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். எனினும், அதையும், மீறி […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி தொடர்ச்சியாகப் பல முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நாடாளுமன்றமான 'கினெஸட்' (Knesset) கலைக்கப்பட்டது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி தொடர்ச்சியாகப் பல முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நாடாளுமன்றமான ‘கினெஸட்’ (Knesset) கலைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் கோடைகால விடுமுறைக்காக முடங்குவதாக இருந்த கினெஸட் நாடாளுமன்றம், திட்டமிட்டபடி அக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் கூட்டப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போர் நீடித்து வரும் சூழலில், அடுத்த தேர்தலில் […]

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

முன்னாள் IGPயின் மரணம் குறித்து தீவிர விசாரணை

  • July 17, 2026
  • 0 Comments

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது நெஞ்சு பகுதியிலேயே துப்பாக்கிச்சூட்டு காயம் இருந்துள்ளது. பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியாலேயே அவர் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

தீவிரமடையும் மோதல்: ஹார்முஸ் நீரிணை முற்றுகையால் உலகளவில் தவிக்கும் எரிசக்திச் சந்தை

  • July 17, 2026
  • 0 Comments

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவத் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் கடற்படை மற்றும் புரட்சிகர காவல் படையினரின் (Revolutionary Guards) முக்கிய தளங்கள் அமைந்துள்ள பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகிலும், கெஷ்ம் தீவிலும் (Qeshm Island) […]

பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் 'பம்ப் அண்ட் டம்ப்' (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரங்கேறும் புதிய முதலீட்டு மோசடி

  • July 17, 2026
  • 0 Comments

பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் ‘பம்ப் அண்ட் டம்ப்’ (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய பிணையங்கள் மற்றும் முதலீட்டு ஆணைக்குழு […]