கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை. ஐரோப்பா செய்தி

வறட்சியால் திணறும் Greek தீவு

  • July 16, 2026
  • 0 Comments

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை. குடிநீருக்காக முழுமையாக பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கும் இத்தீவு, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது மிக மோசமான வறண்ட காலநிலையை எதிர்கொண்டுள்ளது. இத்தீவில் 1990களின் பாதியில் கட்டப்பட்ட ஒரேயொரு […]

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். செய்தி

திருகோணமலையில் யானை தந்தங்களை வைத்திருந்தவர் கைது

  • July 16, 2026
  • 0 Comments

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது யானை தந்தம் மீட்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன மற்றும் எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யானை தந்தத்துடன் […]

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள எரிசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதுவரை கடைப்பிடித்து வந்த பொறுமை கொள்கையை கைவிட்டு, கடுமையான பதிலடி கொடுக்க அந்நாட்டு இராணுவம் தயாராகி வருகிறது. குறிப்பாக, உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் மீது நிரந்தர இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது. இந்த நீர்ச்சந்தியை ஒரு பாதுகாப்பு அரணாக ஈரான் கருதுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து […]

அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம்

  • July 16, 2026
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். […]

latestnews,breakingnews,srilankanews,news update,lka,cricketnews, sportsnews, ,politicalnews,cinemanews,indiannews,india,tamilnaadu,war, செய்தி

அநுர அரசுக்கு எதிராக ஐ.நாவை நாடியது கூட்டு எதிரணி

  • July 16, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது. மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள உள்ளிட்டோர் நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே பிரான்சேயைச் சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர். நீதித்துறையில் உருவாகி வரும் சூழல் குறித்து ஐ.நா.வின் கவனத்திற்குக் […]

வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (15) நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழில் 3 தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

  • July 16, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (15) நடைபெற்றது. வலுசக்தி அமைச்சினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், இந்த ஆண்டில் நிறைவு செய்யக்கூடிய திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. நெடுந்தீவு, […]

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதற்கு அருகில் உள்ள பங்தாஷ்ட் (Pakdasht), பார்சின் (Parchin) ஆகிய பகுதிகளில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • July 16, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதற்கு அருகில் உள்ள பங்தாஷ்ட் (Pakdasht), பார்சின் (Parchin) ஆகிய பகுதிகளில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்களது தற்காப்பு மற்றும் பதிலடி நடவடிக்கைகள் (Retaliatory operations) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் “தாக்குதல் உள்கட்டமைப்புகளை” (Offensive infrastructure) அழிப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும், அடுத்தடுத்த […]

FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செய்தி விளையாட்டு

தங்கக் காலணி யாருக்கு? மெஸ்ஸி – எம்பாப்பே இடையே உச்சக்கட்டப் போட்டி

  • July 16, 2026
  • 0 Comments

FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லியோனல் மெஸ்ஸியும் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயும் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் தலா 6 கோல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர். ஒருவேளை வீரர்கள் சமமான எண்ணிக்கையில் கோல்களை அடித்திருந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க அசிஸ்ட்கள் (Assists – கோல் அடிக்க வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றங்கள்) கணக்கில் கொள்ளப்படும். இந்தத் விதிமுறையின்படி […]

ஆஸ்திரேலியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் புதிய கடுமையான அணுகுமுறைக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 2027 இக்குள் புதிய AI சட்டங்கள் அமுல்

  • July 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் புதிய கடுமையான அணுகுமுறைக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், இத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்வதற்கான கூடுதல் விவரங்களையும், தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. முன்னதாக மென்மையான முறையில் AI கட்டுப்பாடுகளை அணுகிய ஆஸ்திரேலிய அரசு, தற்போது தனது போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு (2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள்) புதிய AI விதிமுறைகளைச் சட்டமாக்கப் போவதாகப் பிரதமர் அல்பானீஸ் புதன்கிழமை அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி: […]

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் 15 நாட்களுக்குள் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு டெங்கு

  • July 16, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 17, 051 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 38, 160 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.