அரசியல் இலங்கை செய்தி

“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளியோம்” – மஹிந்த அணி திட்டவட்டம்!

  • May 21, 2026
  • 0 Comments

“போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற சானக மாதுகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “போரில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எமக்கு கவலை உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் தமிழ் ஈழப் படத்துடன், கொடியுடன், பாடல்களையும் […]

அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே சர்வதேசத்தை நாடினோம்: சிறிதரன் எம்.பி.

  • May 21, 2026
  • 0 Comments

” இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில், சர்வமதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் […]

உலகம் செய்தி

தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஒரு புதிய போரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf எச்சரித்துள்ளார். எனவே, தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ” எதிரிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் மோதலுக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” – எனவும் ஈரான் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா செய்தி

“மேற்காசிய போர்” – ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஆஸ்திரேலியா அதிருப்தி!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேற்காசியா போர் தொடர்பில் தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிவருவதால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese  சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கையானது உலகிற்கும் மிகவும் கடினமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என இரு நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். பின்னர் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டது என அறிவித்தார். இன்று காலை நாம் விழித்தபோது , பரிசீலிக்கப்படுகின்றது என அறிவிப்பு […]

உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஈரானுக்கு அழைப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது. எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. சீனாவிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளதால் இது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படலாம் என தெரியவருகின்றது. உலகளாவிய ரீதியில் அமைதியை […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வு அவசியம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் வலியுறுத்து!

  • May 20, 2026
  • 0 Comments

”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

இலங்கை செய்தி

வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (20) முற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் கையளிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப […]

இந்தியா உலகம் செய்தி

இரு தரப்பு உறவு வலுவடையும்: இந்தியா, இத்தாலி பிரதமர்கள் உறுதி!

  • May 20, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கு இரு நாடுகளின் பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதன்பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். “இந்தியா- இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு சுமூகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான ஒரு பகிரப்பட்ட […]

உலகம் செய்தி

போரால் இஸ்ரேல் விமான நிறுவனத்துக்கு பேரிழப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளின் காரணமாக, இஸ்ரேலின் தேசிய விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ (El Al) கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், வணிக ரீதியிலான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் விளைவாக, நடப்பு ஆண்டின் முதலாவது காலாண்டில் மட்டும் ‘எல் அல்’ நிறுவனம் சுமார் 67 மில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் லாபத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 27 […]

error: Content is protected !!