செங்கடல் கடற்கரை முழுவதும் ஹூதிகள் வசம்?
ஹூதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரமான மோச்சாவைக் (Mokha) கைப்பற்றியதன் மூலம், யேமனின் செங்கடல் கடற்கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கமைய உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய அல்-மசிரா தொலைக்காட்சி, யேமனின் மோச்சா விமான நிலையத்தைக் குறிவைத்து சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் செய்தி வெளியிட்டுள்ளது.



