செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு அபராதம்!

  • May 16, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஐசிசியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி , பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், குறித்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பாகிஸ்தான் அணி மெதுவாகப் பந்துவீசியது (8 ஓவர்கள் குறைவு) தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதமும், 8 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி […]

செய்தி விளையாட்டு

மண்கவ்வியது சென்னை அணி: play-off வாய்ப்பும் கேள்விக்குறி!

  • May 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதற்கமைய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். 20 […]

ஆஸ்திரேலியா செய்தி

40 ஆண்டு கால மாற்றம்: ஆஸ்திரேலிய பழங்குடியினப் பெண்களின் வேலைவாய்ப்பு இருமடங்கு உயர்வு!

  • May 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு பெண்களே முக்கியக் காரணியாக விளங்குவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் கல்வி கற்பதில் பின்தங்குவதும், சட்டச் சிக்கல்களில் சிக்குவதும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 1981 முதல் 2021 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ஆய்வு செய்தனர். கடந்த 40 ஆண்டுகளில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சியில் 93 விழுக்காடு பெண்களால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. பூர்வக்குடி […]

இந்தியா செய்தி

ஐ.நாவின் செயல்திறன் சரிந்துவிடும்: இந்தியா எச்சரிக்கை!

  • May 15, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபையை மறுசீரமைப்பதற்குரிய காலம் கடந்துவிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாதுகாப்பு சபை உட்பட ஐநாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற […]

இலங்கை செய்தி

வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்தில் ஊழல்: யாழில் போராட்டம்!

  • May 15, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களைக் கண்டித்து, யாழ். ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், “வடக்கு மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசும், ஊழல் கல்வி அதிகாரிகளும் […]

இந்தியா செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடன் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 15, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று முக்கியமான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான அரசமுறை பயணத்தை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்தார். இதற்கமைய முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு சந்திப்பின் முடிவில் […]

இலங்கை செய்தி

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார். பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக, இப்புதிய திட்டத்தில் இறால் குஞ்சுகள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்த ஏற்பாடு!

  • May 15, 2026
  • 0 Comments

  டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. […]

இலங்கை செய்தி

10 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 112 வீடுகள் சேதம்!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 151 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 112 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தால் ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் […]

இலங்கை செய்தி

கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி! வரலாற்று நினைவுகளை மீட்டெடுத்த மக்கள்!!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்தருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள் சிக்கி, உயிருக்குப் போராடிய மக்கள், உணவுத் தட்டுப்பாடு காரணமாகத் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு, உப்புக்கூட இல்லாமல் கஞ்சி காய்ச்சிப் பசியாறினர். அந்தத் துயரார்ந்த நாள்களையும், மக்களின் தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தின் இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு எங்கும் கஞ்சி […]

error: Content is protected !!