இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

இந்தோனேசியா ஜனாதிபதியால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று இந்தோனேசியா சென்றார். தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்த அவரை, ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.

இந்தோனேசியா வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தொடங்கும் விதமாக அதிபர் மாளிகையான இஸ்தானா மெர்டேகாவில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்கள் முன்னிலையில் இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ வழங்கினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி