பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது
பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்தோனேசியா ஜனாதிபதியால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று இந்தோனேசியா சென்றார். தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்த அவரை, ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.
இந்தோனேசியா வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தொடங்கும் விதமாக அதிபர் மாளிகையான இஸ்தானா மெர்டேகாவில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்கள் முன்னிலையில் இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ வழங்கினார்.




