இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 ஜோடிப் புறாக்கள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் ஊடாக கடல்வழியாக இலங்கைக்கு இப்புறாக்களைக் கடத்துவதற்காக, பாம்பன் பாலம் வழியாக வாகனத்தில் கொண்டு சென்றபோதே பொலிஸார் இவற்றை இடைமறித்துக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரம் ஊடாக அண்மைக்காலமாக பெருமளவிலான பறவைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தீவிர வாகனச் சோதனையின்போதே இந்தப் புறாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் 120 ஜோடிப் புறாக்களையும் கைப்பற்றிய பொலிஸார், பறவைகளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இந்தக் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்துத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை