‘சிறைச்சாலை கலவரம்’- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி
“ சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து. நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் அவர் பதவி விலக வேண்டும். இதுதான் சர்வதேச சம்பிரதாயமாகும். அவ்வாறு செய்யாமல் பொறுப்பை ஏற்பதாகக் கூறுவது ஏற்புடைய விடயம் அல்ல.
இந்தியாவில் ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து, துறைசார் அமைச்சர் பதவி விலகினார்.
விபத்துக்கு அவர் காரணம் இல்லை என்றபோதிலும், பொதுநலவாய சம்பிரதாயத்துக்கு மதிப்பளித்து அவர் பதவி விலகினார்.
இதே வழியில் எமது நாட்ட நீதி அமைச்சரும் பின்பற்ற வேண்டும்.” – என்றார் ஜி.எல்.பீரிஸ்.




