அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன.

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“ நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமது கட்சி கைச்சாத்திடாது. பிரேரணை விவாதத்துக்குவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கப்படமாட்டாது.

ஆனாலும் இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று, சிறைச்சாலை கட்டமைப்பிலுள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம்.” எனவும் சுமந்திரன் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை