செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் புதிய எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத போதிலும், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளே இவ்வாறு முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று யாழ். நீதிவானின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன. நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகளில், மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் […]













