யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் எழுந்தமானமாக் குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

  • August 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடல் மற்றும் திறந்த நீதிமன்ற அமர்வு, நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் செம்மணி அகழ்வாய்வுத் தளத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படை அடாவடி: 60 பேர் கைது

  • August 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய வன்முறை மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளால் இதுவரை […]

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாயகம் திரும்புவேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சூளுரை

  • August 6, 2026
  • 0 Comments

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கைது, சிறைத்தண்டனை அல்லது மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும், தனது ஆதரவாளர்களை விட்டுத் விலகி இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், தொலைபேசி (ஆடியோ) வாயிலாகச் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

22 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்துப் பேராயருக்கு விளக்கமளிப்பு!

  • August 6, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் இன்று (06) பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், “மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், மக்கள் ஆணையை மீறாத வகையிலும் […]

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடோம்: அரசு திட்டவட்டம்

  • August 6, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். புதிய அரசமைப்பு மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு ஆகிய இரண்டிற்குமே மக்களுக்குத் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: “புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கும், தற்போதைய அரசமைப்பில் மறுசீரமைப்புகளை […]

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

“அழுத்தங்களுக்கு அடிபணியோம்: விசாரணை வேட்டை தொடரும்”

  • August 6, 2026
  • 0 Comments

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதனாலேயே பொலிஸ் மா அதிபருக்கே அச்சுறுத்தல் விடுக்கும் நிலைக்குச் சிலர் தள்ளப்பட்டுள்ளதாகவும், எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: […]

மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் "தேசத்துரோகிகள்" என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள் தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

ஈரானிய வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு: குடியுரிமை சான்றிதழ் பெற்று நெகிழ்ச்சி

  • August 6, 2026
  • 0 Comments

மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள் தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஈரானிய தேசியக் கீதத்தைப் பாட மறுத்ததன் மூலம் பாத்திமா பசந்தீதே (Fatemeh Pasandideh – 22) மற்றும் அதீபே ரம்சானிசாதே (Atefeh Ramezanisadeh – 34) ஆகிய இரு வீராங்கனைகளும் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர். […]

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை

  • August 6, 2026
  • 0 Comments

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் மழை நீடித்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் மக்களின் […]

மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார். உலகம் செய்தி

மியான்மர் இராணுவ ஆட்சியாளர் தாய்லாந்து விஜயம்

  • August 6, 2026
  • 0 Comments

மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டில் ஆங் சாங் சூச்சியின் (Aung San Suu Kyi) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அவர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டில் உள்நாட்டுப் போரை மூட்டியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் சீரழிந்தது. 2017-ஆம் ஆண்டில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதில் தொடர்புடையவர் என்பதால் ஏற்கனவே […]

தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். செய்தி விளையாட்டு

திட்டத்தை கைவிட்டு மன்னிப்பு கோரினார் FIFA தலைவர்

  • August 6, 2026
  • 0 Comments

தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப் பதவிக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. FIFA தலைவராக அவரே நீடிப்பார். தான் கொண்டு வந்த திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பலத்த விமர்சனங்களை அடுத்து, புதன்கிழமை மொராக்கோவின் ரபாத் நகரில் உள்ள FIFA வின் ஆப்பிரிக்க அலுவலகத்திற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை […]