இலங்கை செய்தி

இலங்கை கடற்படைக்கு செயற்கைகோள் தொடர்பாடல் அமைப்பு கையளிப்பு

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது.

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22 கொழும்புத் துறைமுகத்தில் SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் Dr.S. Paul Kapur ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட வரவேற்றார்.

நிகழ்வில் உரையாற்றிய Dr.S. Paul Kapur,

“உலகின் மிகப் பரபரப்பான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக விளங்கும் பிராந்தியத்தில் கடல்சார் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் இலங்கை கடற்படைக்கு Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் வழங்கவுள்ளதாக அறிவித்தார்.

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது.

அமெரிக்காவின் மேம்பட்ட செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் இயங்கும் Fleet Broadband அமைப்பு, கப்பல்களுக்கு இடையிலும் கப்பல்களுக்கும் கரையோர நிலையங்களுக்கும் இடையிலும் பாதுகாப்பான தொடர்பாடலை மேட்கொள்ள உதவும்.

இதன் மூலம், கரையோர தொடர்பாடல் எல்லைகளுக்கு அப்பாலும் செயற்படும் போது நம்பகமான குரல், தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் உறுதி செய்யப்படுகிறது.

மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) செயற்படும் கடற்படை தலைமையகம், விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு இடையில் நிகழ்நேர இணைப்பை இந்த அமைப்பு வழங்கும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை