ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான 'வன் நேஷன்' (One Nation) கைப்பற்றியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிரடி திருப்பம்: ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுகட்சி

  • August 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான ‘வன் நேஷன்’ (One Nation) கைப்பற்றியுள்ளது. தேசியக் கீழவையில் தனது முதல் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவை இக்கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த்தில் (Perth) தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய சீக்ரெட் ஹாபர் (Secret Harbour) தொகுதியில் […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், 'ஆதரவு' (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு’ – ஐஸ்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு முடிவு என்ன?

  • August 30, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், ‘ஆதரவு’ (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தகுதிபெற்ற 2,70,000 வாக்காளர்களில் முதற்கட்டமாக எண்ணப்பட்ட 87,000 வாக்குகளின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, 48.8 சதவீதமானோர் இதற்கு எதிராக (‘இல்லை’) வாக்களித்துள்ளனர். எனினும், […]

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் நீதித்துறைக்கு ஆபத்து இல்லை

  • August 30, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “அரசின் சகல தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சியினர் உள்ளனர். சகலதையும் எதிர்க்கும் அவர்களின் […]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கை செய்தி

“நீதிக்கான நீள்பயணம்” சர்வதேச மாநாடு யாழில் இன்று

  • August 30, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், “நீதிக்கான நீள்பயணம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின் நினைவுபடுத்தலோடு கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடையவுள்ளது. இந்த மாநாட்டில் சர்வதேச […]

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: தமிழரசுக் கட்சி எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

  • August 29, 2026
  • 0 Comments

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. எமது நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை. […]

அமெரிக்காவுடனான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி: ஒப்புக்கொண்டது ஈரான்

  • August 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர். மக்களின் பொருளாதார கஷ்டங்களுக்குத் தீர்வு காணுமாறு அந்நாட்டின் உச்ச தலைவர் அரசாங்கத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தடைகள் மற்றும் முற்றுகை காரணமாக நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும், சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஈரான், அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொள்ளப் போவதாகவும், இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்வதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையைக் கட்டுப்படுத்தும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் […]

22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது இலங்கை செய்தி

சர்வஜன வாக்கெடுப்பு: சட்டமா அதிபர் திணைக்களம் கூறியது என்ன?

  • August 29, 2026
  • 0 Comments

22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல இத்தகவலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசாங்கம் என்ன செய்யும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் […]

இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது. செய்தி விளையாட்டு

இங்கிலாந்து விக்கெட் வேட்டை:110 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான்

  • August 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களைப் பெற்றது. பின் முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து […]

Paris St-Germain (PSG) அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் பிராட்லி பர்கோலாவை (Bradley Barcola) ஒப்பந்தம் செய்ய £123 மில்லியன் வரை மதிப்பிலான தொகையில் லிவர்பூல் (Liverpool) அணி உடன்பாடு எட்டியுள்ளது. செய்தி விளையாட்டு

£123 மில்லியன் மெகா ஒப்பந்தம்: PSG நட்சத்திரம் பர்கோலாவை வளைத்துபோட்டது Liverpool

  • August 29, 2026
  • 0 Comments

Paris St-Germain (PSG) அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் பிராட்லி பர்கோலாவை (Bradley Barcola) ஒப்பந்தம் செய்ய £123 மில்லியன் வரை மதிப்பிலான தொகையில் லிவர்பூல் (Liverpool) அணி உடன்பாடு எட்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயதான இந்த நட்சத்திர வீரருக்கு PSG ஆரம்பத்தில் £145 மில்லியன் விலை நிர்ணயித்திருந்த போதிலும், முதற்கட்டமாக £106 மில்லியனும், கூடுதல் சலுகைகளாக (add-ons) £17 மில்லியனும் கொண்ட ஒப்பந்தத் தொகுப்பிற்கு லிவர்பூல் சம்மதித்துள்ளது. ஆன்பீல்ட் (Anfield) மைதானத்தில் நீண்டகால ஒப்பந்தத்தில் […]

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது. இலங்கை செய்தி

குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • August 29, 2026
  • 0 Comments

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது. இந்தத் தரவரிசையின்படி, ஒரு இலங்கையருக்கான குறைந்தபட்ச ஊதியம் 200 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பூட்டானியருக்கான குறைந்தபட்ச ஊதியம் 180 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான ஊதியத் தரவு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசையை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தெற்காசியப் பிராந்திய நாடுகள் இலங்கையை […]