ஈரானுக்காக தங்கம் வழங்கிய காஷ்மீர் மக்கள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, காஷ்மீர் மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர். பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடைகளை அவர்கள் வழங்கி உள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மக்களுக்கு ஆதரவாக, காஷ்மீரின் பட்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கத் தொடங்கியுள்ளனர். ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு […]












