உலகம்

லெபனானுடன் நேரடி பேச்சு நடத்த தயாராகும் இஸ்ரேல்?

  • April 10, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் முன்வந்துள்ளது என தெரியவருகின்றது. எனினும், அங்கு தாக்குதலை முற்றாக நிறுத்துவது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் தனது தாக்குதல்களைக் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே வேளையில், முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை கையாள்வதில் ஈரான் காட்டும் மெத்தனம் மற்றும் ஒப்பந்த மீறல்களை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் – ஒருவர் பலி

  • April 10, 2026
  • 0 Comments

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் […]

இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

  • April 10, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில்: 10 பேர்கொண்ட குழு நியமனம்!

  • April 10, 2026
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயத்தை ஒட்டி கட்சிகள் எல்லாவற்றினாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐவரையும், கட்சிகளின் ஐந்து பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை: NPP அரசு திட்டவட்டம்!

  • April 10, 2026
  • 0 Comments

“பொருளாதார வீழ்ச்சி, இனவாதம் என்பவற்றை வைத்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என சிலர் நினைக்கின்றனர். அது பகல் கனவு மாத்திரமே. எமது ஆட்சியை குறுக்கு வழியில் கவிழக்க முடியாது.” – என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டுவருகின்றது. மக்களுக்கான சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டில் வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதி ஒரு சில எதிரணி […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம்: பாகிஸ்தானின் உதவியை கோருகிறது லெபனான்!

  • April 9, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது லெபனான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார். அதேபோல இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என லெபனான் பிரதமர் Nawaf Salam கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரானும் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை நடக்கப்போவது என்ன?

  • April 9, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (10) விவாதம் நடத்தப்படவுள்ளது. மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது உறுதி. எனினும், தரமற்ற நிலக்கரி இறக்குமதிமூலம் இடம்பெற்றுள்ள மோசடியை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் Masoud Pezeshkian கூறியுள்ளார். அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஈரான் சபாநாயகரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: எட்டப்படுமா தீர்வு?

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இதன் ஓர் அங்கமாக கலந்துரையாடல் நடைபெறும் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒரு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சித்துவருகின்றது. எனினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • April 9, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கப்பெறவேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியினர் […]