சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு – கிழக்கு […]

இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல் – விசாரணைக்கு மூவரடங்கிய விசேட குழு நியமனம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். […]

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

கைதி தற்கொலை முயற்சி: மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு

  • July 7, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். […]

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர். இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 ஜோடிப் புறாக்கள் பறிமுதல்

  • July 7, 2026
  • 0 Comments

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப் புறாக்களைத் தமிழகப் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரம் ஊடாக கடல்வழியாக இலங்கைக்கு இப்புறாக்களைக் கடத்துவதற்காக, பாம்பன் பாலம் வழியாக வாகனத்தில் கொண்டு சென்றபோதே பொலிஸார் இவற்றை இடைமறித்துக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரம் ஊடாக அண்மைக்காலமாக பெருமளவிலான பறவைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தீவிர வாகனச் சோதனையின்போதே […]

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது

  • July 7, 2026
  • 0 Comments

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவில் உயரிய விருது இந்தோனேசியாவின் உயரிய குடிமை விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தோனேசியா ஜனாதிபதியால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று இந்தோனேசியா சென்றார். தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்த அவரை, ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். இந்தோனேசியா வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ […]

லண்டன் போக்குவரத்துத் துறையும், லண்டன் மேயர் சாதிக் கானும், லண்டனில் உள்ள பேருந்துகள் மற்றும் டிராம்களுக்கான ஒற்றைக் கட்டணத்தை ஒரு பவுண்ட் 75 பென்ஸ் என்ற அளவில் மேலும் நான்கு மாதங்களுக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி

லண்டனில் பேருந்து மற்றும் டிராம் கட்டணங்களை உயர்த்தாமலிருக்க முடிவு

  • July 7, 2026
  • 0 Comments

லண்டன் போக்குவரத்துத் துறையும், லண்டன் மேயர் சாதிக் கானும், லண்டனில் உள்ள பேருந்துகள் மற்றும் டிராம்களுக்கான ஒற்றைக் கட்டணத்தை ஒரு பவுண்ட் 75 பென்ஸ் என்ற அளவில் மேலும் நான்கு மாதங்களுக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். தற்போதைய வாடகைக் காலம் ஜூலை ஐந்தாம் திகதி முடிவடைய இருந்த நிலையில், நவம்பர் முதலாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி முதல், ஒருவழிப் பயணக் கட்டணம் 10 பென்ஸ் அதிகரித்து 1.85 பவுண்ட்ஸாகவும், சலுகை அட்டைதாரர்களுக்குக் கட்டணத்தில் […]

உலகம் செய்தி

சீனாவில் இலஞ்சம் வாங்கிய முன்னாள் அரச அதிகாரிக்கு மரண தண்டனை

  • July 7, 2026
  • 0 Comments

சுமார் 30 ஆண்டுகளாக 325 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, நான்ஜிங்கின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரியான யாங் யூலினுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இலஞ்சம் வாங்குதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், இலஞ்சம் கொடுத்தல், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றங்களுக்காகவும் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, 1993 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், யாங் யூலின் திட்ட ஒப்புதல்கள், […]

'சிறைச்சாலை கலவரம்'- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி இலங்கை செய்தி

‘சிறைச்சாலை கலவரம்’- நீதி அமைச்சருக்கு வலுக்கிறது நெருக்கடி

  • July 7, 2026
  • 0 Comments

“ சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து. நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு “சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் அவர் பதவி விலக வேண்டும். இதுதான் சர்வதேச சம்பிரதாயமாகும். அவ்வாறு செய்யாமல் பொறுப்பை ஏற்பதாகக் கூறுவது ஏற்புடைய விடயம் அல்ல. இந்தியாவில் ரயில் விபத்து […]

ஈரானின் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி, நாட்டின் தலைமை நீதிபதியாக கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேஇ-யை (Mohseni-Ejei) மீண்டும் நியமித்துள்ளார். உலகம் செய்தி

இறுதிச்சடங்குக்கு மத்தியில் ஈரானில் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

  • July 7, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி, நாட்டின் தலைமை நீதிபதியாக கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேஇ-யை (Mohseni-Ejei) மீண்டும் நியமித்துள்ளார். மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கு மத்தியில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் நீதித்துறை மாற்றங்களை முன்னெடுக்குமாறு புதிய தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடருமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். நாட்டின் இலக்குகளை அடைவதற்கும், தலைவரின் படுகொலைக்கு பழிவாங்குவதற்கும் தான் உறுதியாக இருப்பதாக எஜேஇ மாநில […]

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் பயணத்துக்கு மத்தியில் சிரியாவில் குண்டு வெடிப்பு

  • July 7, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, நகரின் வான்பரப்பில் அடர்ந்த புகைமூட்டம் எழும்புவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு பகுதியிலேயே இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை ஒரு “குற்றச்செயல்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதில் பொதுமக்கள் […]