வவுனியா பல்கலையில் புதிய விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா: பிரதமர் பங்கேற்பு இலங்கை செய்தி

வவுனியா பல்கலையில் புதிய விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா: பிரதமர் பங்கேற்பு

  • August 22, 2026
  • 0 Comments

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (22.08.2026) சிறப்பாக நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் கௌரவ பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். […]

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் (Senior Men’s Program) துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ( ) முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன நியமனம்

  • August 22, 2026
  • 0 Comments

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் (Senior Men’s Program) துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ( ) முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் (National High Performance Center) தங்கியிருந்து செயல்படவுள்ள அவர், மூத்த பிரிவின் ஒரு அங்கமாக தேசிய அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த இவர், முன்னர் […]

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது. செய்தி விளையாட்டு

அர்ஜென்டீனா வீரர்கள் மூவருக்கு FIFA அதிரடித் தடை

  • August 22, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது. அத்துடன், மத்திய கள வீரர் லியான்ட்ரோ பரீடஸுக்கு (Leandro Paredes) 10 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் (Eric Garcia) கழுத்தைப் பிடித்துத் தள்ளியதுடன், காவியையும் (Gavi) தரைமட்டமாக்கிய பரீடஸுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது, 2014 ஆம் ஆண்டு உருகுவே […]

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) "அமெரிக்க நிலப்பரப்பு" என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க நிலப்பரப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

  • August 22, 2026
  • 0 Comments

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) “அமெரிக்க நிலப்பரப்பு” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தெற்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், “நாம் வெற்றி பெற்றுவிட்டோமா என்று கூட நமக்குத் தெரியவில்லை. ஏனெனில், ஹோர்முஸ் நீரிணையை நான் இப்போது ஒரு அமெரிக்க நிலப்பரப்பாகவே பார்க்கிறேன்” என்று கூறினார். மறைந்த செனட்டர் லிண்ட்சி கிரகாமின் வெற்றிடத்தை […]

இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ‘டெங்கு’

  • August 22, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பிட்ட அவ்விரு மாதங்களிலும் நாளொன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகிவந்த நிலையில், தற்போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,964 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர். தேசிய […]

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார். செய்தி

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் ஆயுதப் பறிமுதல் நடவடிக்கை

  • August 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலைத் தொடர்ந்து, ஆயுதங்களைத் […]

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து உரையாடல்களை வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை: சீனாவிடம் அமெரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • August 22, 2026
  • 0 Comments

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து உரையாடல்களை வெளியிட்டுள்ளன. போர் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களை நெருங்கும் நிலையிலும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித அமைதிப் பேச்சுகளும் நடைபெறவில்லை. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான எண்ணெய் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. அனுமதியற்ற எண்ணெய் தாங்கிப் படகுகள் அந்த குறுகிய நீர்வழியைக் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் […]

நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நாடாளுமன்றில் இறுதி உரை: மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா

  • August 22, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: “இது எனது இறுதி உரையாகும். நான் யாருக்காவது எப்போதாவது தவறு செய்துள்ளேனா? நான் எனது மக்களை நேசிக்கின்றேன். சிங்கள மக்களுக்கும் நான் ஆதரவானவன். இறுதியாக நான் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் முஸ்லிம் மக்களுக்கானதே ஆகும். இந்த […]

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு

  • August 22, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதை விடவும், மக்களுக்காக இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. அந்தப் பணிகளை முதலில் […]

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாதுகாப்பு உறவை பலப்படுத்த இந்தோனேஷியா, சீனா இணக்கம்

  • August 21, 2026
  • 0 Comments

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. தென்சீனக் கடலில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசப் பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் சவால்களுக்கு மத்தியிலேயே இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டொங் ஜுன் ஆகியோர், இந்தோனேசியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்பின் […]