இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 27, 2026
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றும் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]

உலகம்

பங்களாதேஷில் பேருந்து விபத்து : 16 பேர் பலி

  • March 26, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகம்

கொலம்பியாவில் பரபரப்பு: இராணுவ வீரர்களுடன் பறந்த விமானம் விபத்து

  • March 24, 2026
  • 0 Comments

கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான C-130 Hercules ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொலம்பிய இராணுவ வீரர்கள் மற்றும் வான்படை ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், பெரு (Peru) எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகளின் போது இதுவரை 66 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 114 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்ததாக கொலம்பியா வான்படைத் […]

இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

  • March 24, 2026
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க […]

அரசியல் இலங்கை

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறிய கோட்டாபய!

  • March 17, 2026
  • 0 Comments

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (17) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இலங்கை

இலங்கையில் ஆயுதங்களுடன் சிக்கிய படகு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

மஹரகம பகுதியில் உள்ள கடைகளில் தீப்பரவல்

  • March 8, 2026
  • 0 Comments

மஹரகம பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின், 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்புப் படையினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

  • March 3, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும் சமூக மட்டத்திலும் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

error: Content is protected !!