இலங்கை

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!

  • May 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என அடையளாம் காணப்பட்டுள்ளார். மதுபோதைக்கு அடிமையான குறித்த நபர் வீட்டில் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மேற்படி முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்துள்ளனர். இதன்போது அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த […]

இலங்கை

மீனவரின் வலையில் சிக்கிய மனித உடல் – மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் மீன்பிடிக்கச்சென்ற மீனவரின் வலையில் மனித உடல் ஒன்று சிக்கியது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மீனவர் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் குறித்த சடலத்தை இனங்கண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சம்பவ தினத்தன்று மதுபானம் அருந்திய நிலையில் […]

இலங்கை

16 வயது சிறுமி கடத்தல் : மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. தமது தந்தையுடன் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்காக சென்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். குறித்த தனியார் வகுப்பு நேற்று இடம்பெறாததன் காரணமாக தந்தை மட்டக்களப்பு நகரில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு அருகில் சிறுமியை விட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி அந்த உறவினர் வீட்டை சென்றடையவில்லை என, அவருடைய தந்தைக்கு தகவல் […]

இலங்கை

காத்தான்குடியில் கரையொதுங்கிய மர்ம பொருள்!

  • March 14, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மர்மப் பொருள் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் , கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.