உலகம் செய்தி

வங்கதேசத்தில் 06 சிசுக்களின் மரணம் தொடர்பில் விசாரணை வேட்டை!

  • May 31, 2026
  • 0 Comments

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் பிறந்து 03 நாட்களே ஆன 06 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தற்போது கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவில் குளிரூட்டி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. மிதமிஞ்சிய வெப்பநிலையே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவை, என்றும்  மருத்துவமனையின் இயக்குநர்களில் […]

உலகம்

பங்களாதேஷில் கோர விபத்து – 15 பேர் ஸ்தலத்தில் பலி!

  • May 25, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இன்று அதிகாலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள டாங்கைல் மாவட்டத்தின் சோரடோயில் (Soratoil) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

தட்டம்மை நோய்த் தாக்கம் – வங்கதேசத்தில் 500இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

  • May 24, 2026
  • 0 Comments

வங்காளதேசத்தில் ஏற்பட்ட தட்டம்மை நோய்த் தாக்கத்தால் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் தெரியவந்துள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் திணறி வருவதாகவும், தீவிர சிசிச்சைப் பிரிவுகளில் படுகை பற்றாக்குறை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நோயை கட்டுப்படுத்த நாடாளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் […]

உலகம்

பங்களாதேஷில் பேருந்து விபத்து : 16 பேர் பலி

  • March 26, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

மாணவர் எழுச்சிக்கு பிந்தைய முதல் தேர்தல் – பங்களாதேஷில் வாக்குப்பதிவு நிறைவு

  • February 12, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் 15 ஆண்டுகள் நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்ய வாக்களித்ததுடன், அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் முன்மொழிவிற்கான வாக்கெடுப்பிலும் பங்கேற்றனர். இதற்கமைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், மாணவர் எழுச்சியிலிருந்து உருவான கட்சியுடன் கூட்டணி அமைத்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் […]